Sunday, April 9, 2017

மனிதர்கள் முன்று வகை

மனிதர்கள் முன்று வகை உண்டு

1.கஜ கர்ணம்🐘

2.அஜ கர்ணம்🐏

3.கோ கர்ணம்🐂

1. கஜகர்ணம் : -

யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !
அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...
அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

2. அஜகர்ணம் : -

ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
... அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

3.கோகர்ணம் :-

பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் ! அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் . இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

கிருபானந்த வாரியார்

No comments:

Post a Comment